

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலை ரூ. 800 உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய ஒரு சவரன் தங்கம், பின்னர் சற்று குறைந்த நிலையில் டிச. 22 மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது. அதுமுதலே நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,04, 000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை சவரனுக்கு மேலும் ரூ. 800 உயர்ந்து 1,04,800 -க்கும் கிராமுக்கு ரூ. 100 மேலும் உயர்ந்து ரூ. 13,100 -க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் இன்று காலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 274-க்கும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ. 2.74 லட்சத்துக்கும் விற்பனையானது.
தங்கம், வெள்ளி விலை இன்றும் புதிய உச்சத்தை அடைந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டை அதிகரித்து வருவதனால் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.