பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் வாரம் இரு நாள்கள் நடைபெறும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இனி வாரம் இரு நாள்கள் முகாம்கள் நடைபெறும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

News image

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் - கோப்பிலிருந்து படம்

Updated On :27 டிசம்பர் 2025, 8:03 pm IST

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இனி வாரம் இரு நாள்கள் முகாம்கள் நடைபெறும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) அறிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆக. 2-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். அதன் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, இன்றும் (டிச. 27) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மாநிலந்தோறும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இந்தநிலையில், இனி வரும் வாரங்களில் இந்த முகாம்கள் கூடுதலாக வியாழக்கிழமைகளிலும் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) தெரிவித்தார்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டதில், அவற்றின் மூலம் 12.36 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Summary

The 'Stalin's Health Protection' scheme will now be conducted two days a week: Minister Ma. Subramanian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.