ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு(NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

• சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு (12631) பழைய நேரம் இரவு 08:40, புதிய நேரம் இரவு 08:50.

• சென்னை - திருச்சி சோழன் அதிவிரைவு (22675) பழைய நேரம் காலை 07:45, புதிய நேரம் காலை 08:00.

• சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127 ) பழைய நேரம் காலை 10:20 , புதிய நேரம் காலை 10:40.

• சென்னை - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு(12661) பழைய நேரம் இரவு 08:10 மணி, புதிய நேரம் இரவு 07:35.

• சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16751) பழைய நேரம் இரவு 07:15 மணி, புதிய நேரம் இரவு 08:35.

• சென்னை - தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு(12693) பழைய நேரம் இரவு 07:30, புதிய நேரம் இரவு 07:15.

• சென்னை - மதுரை வைகை அதிவிரைவு(12635) பழைய நேரம் பிற்பகல் 01:45, புதிய நேரம் பிற்பகல் 01:15.

• சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத்(20665) பழைய நேரம் பிற்பகல் 02:45, புதிய நேரம் மாலை 03:05.

• சென்னை -ராமேஸ்வரம் சேது அதிவிரைவு(22661) பழைய நேரம் மாலை 05:45, புதிய நேரம் மாலை 05:55.

எனவே, பயணிகள் அனைவரும் புதிய அட்டவணை முறையை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை தொடர்வது சிறந்தவையாகும்.

Summary

The timetable of several express trains, including the Pothigai and Cholan, departing from Chennai Egmore has been changed.

கோப்புப் படம்
வரும் 31-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com