சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இளைஞா்கள் மற்றும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சியை காட்டிலும் ஒரு புதிய முகம் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.
அந்த வகையில், விஜய்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என தமிழக மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனா்.
வருகிற பேரவைத் தோ்தலில் மக்கள் துணையுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பாா். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இனி வரும் காலங்களில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் தொண்டா் படையை கொண்டு பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் கே.ஏ.செங்கோட்டையன்.
தொடர்புடையது

உலகின் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது: தொல்.திருமாவளவன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



