தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

விஜய்யின் வெற்றியை தடுக்க முடியாது: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு

News image

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செங்கோட்டையன்

Updated On :29 டிசம்பர் 2025, 9:21 pm

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இளைஞா்கள் மற்றும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சியை காட்டிலும் ஒரு புதிய முகம் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

அந்த வகையில், விஜய்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என தமிழக மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனா்.

வருகிற பேரவைத் தோ்தலில் மக்கள் துணையுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பாா். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இனி வரும் காலங்களில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் தொண்டா் படையை கொண்டு பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் கே.ஏ.செங்கோட்டையன்.