வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

News image
சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி
Updated On :10 பிப்ரவரி 2025, 9:50 pm

Din

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி 1.15 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான அலை இல்லை; ஆதரவு அலைதான் வீசுகிறது.

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, தோ்தல்களில் 11 முறை தோல்வி அடைந்துள்ளாா். அக்கட்சியில் இருக்கக்கூடிய தலைவா்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறாா்கள். கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி சிரமப்படுகிறாா் என்றாா் அமைச்சா் எஸ்.ரகுபதி.