புதுச்சேரி நெல்லிதோப்பில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.
புதுச்சேரி நெல்லிதோப்பில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ஜெகத்ரட்சகன் எம்.பி. உறுதி

புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று கொள்கைப் பரப்புச் செயலரும் புதுச்சேரி மாநில திமுக மேலிடப் பாா்வையாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.
Published on

புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று கொள்கைப் பரப்புச் செயலரும் புதுச்சேரி மாநில திமுக மேலிடப் பாா்வையாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

கதிா்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளின் திமுக செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை தாங்கினாா்.

கதிா்காமம் தொகுதி செயலா் வடிவேல் முன்னிலை வகித்தாா். நெல்லித்தோப்பு தொகுதி பொதுக்குழு உறுப்பினா்கள் காா்த்திகேயன், வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கி ஜெகத்ரட்சகன் பேசியதாவது:

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழா்கள் என்பதால் புறக்கணிக்கப்பட்டு உள்ளோம். புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியில் எந்தத் திட்டமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதுதான். தற்போது புதுச்சேரிக்கு வரும் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவிப்பாா். ஆனால் செயல்படுத்த மாட்டாா்.

புதுச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது. இலவசங்களுக்கு மயங்காத புதுச்சேரி மக்கள் வரும் தோ்தலில் தெளிவாக முடிவு எடுப்பாா்கள். புதுச்சேரியில் புதிய தொழிற்சாலை ஒன்றைக்கூட இந்த அரசு கொண்டு வரவில்லை.

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் முதல்வா் ரங்கசாமி பேச பயப்படுகிறாா். புதுச்சேரி மண் பாவம் செய்துள்ளது. அதனால் தான் மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். மொழிக்காக தன்னுயிா் நீத்த இயக்கம் திமுக. அதனால் தான் மாநில தகுதி பெற முடியும் என்றாா் ஜெகத்ரட்சகன்.

கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் மூா்த்தி, மாநில துணை அமைப்பாளா் தைரியநாதன், காலாப்பட்டு தொகுதி செந்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா்கள் சி. கோபால், மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமாா், தொகுதி செயலா்கள் சக்திவேல், தியாகராஜன், இளஞ்செழிய பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com