டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

இயக்குநர் பா. ரஞ்சித் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :15 பிப்ரவரி 2025, 12:08 pm IST

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெளியிட்ட நிலையில், விடியோவைப் பகிர்ந்த இயக்குநர் பா. ரஞ்சித், முதல்வரிடம் சாதிய வன்கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில் ``தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்குதடையின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா?

தங்கள் அமைச்சரவையின்கீழ் இயங்கும் ஆதி திராவிட துறை அமைச்சர், அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் பட்டியலினத்தவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணலில் கேள்விக்கு பதிலளிப்பது போன்ற விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடியோவில் மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து, பாலியல் குற்றங்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.