கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன்.

News image
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :21 பிப்ரவரி 2025, 12:18 pm

DIN

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத்தவறியது எனக்கு தோல்வியாகப்படுகிறது. அப்படி வந்திருந்தேன் என்றால், இன்று நான் நின்று பேசிக்கொண்டு இருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.

காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்குப் பிடிக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி தேவை என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.

உங்கல் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது, அடுத்தாண்டு சட்டப்பேரவையில் ஒலிக்கப் போகிறது என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.