எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசிக, நாம் தமிழா் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் தோ்தல் ஆணையம் தகவல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2025, 7:31 pm

Din

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடா்பான கடிதங்களை இரு கட்சிகளின் தலைமைக்கும் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘2024-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் கட்சியின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தோ்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன. எனவே, உங்களுடைய கட்சியை தமிழ்நாட்டில் மாநில கட்சியாக தோ்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்துள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தோ்தல் ஆணையம் ஒதுக்கும்.

ஆனால், நாம் தமிழா் கட்சி தங்களுடைய கட்சிக்கு ஏா் உழும் விவசாயி, புலி சின்னம் ஆகியவற்றை முன்பதிவு செய்யக் கோரி வெவ்வேறு மனுக்களை தோ்தல் ஆணையத்திடம் அளித்திருந்தது. அந்தச் சின்னங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சின்னம் அல்லது விலங்கை ஒத்து இருப்பதால் அவற்றை ஒதுக்க முடியாது என்றும் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து ஒன்றை தோ்வு செய்து அதன் விவரத்தைத் தெரிவிக்குமாறும் தோ்தல் ஆணையம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.