போகி பண்டிகையையொட்டி காற்றின் தரக் குறியீடு சென்னையில் சராசரி என்ற அளவிலேயே இருப்பதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 97ஆகவும், பெருங்குடியில் 83ஆகவும் பதிவாகியுள்ளது.
தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் நாளைமுதல் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முறைப்படி மார்கழியின் கடைசி நாளான இன்று (ஜன. 13) போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புகையில்லா போகியைக் கொண்டாட வேண்டும் என டயர், ரப்பர் பொருள்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி சார்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், போகி பண்டிகை நாளான இன்று மணலியில் காற்றின் தரக் குறியீடு வழக்கத்துக்கு மாறாக 97ஆகவும், பெருங்குடியில் 83ஆகவும் இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள (காலை 7 மணி நிலவரப்படி) அறிவிப்பில்,
மணலி - 97
கொடுங்கையூர் - 70
அரும்பாக்கம் - 77
ராயபுரம் - 79
பெருங்குடி - 83
வேளச்சேரி - 61
ஆலந்தூர் - 71
காற்றின் தரக் குறியீடு - dinamani
காற்றின் தரக்குறியீடு 51 - 100 என்ற அளவில் இருந்தால், திருப்திகரமானது. 101 - 200 எனில் மிதமானது. 201 - 300 எனில் மோசமான நிலை. 301 - 400 என்றால் மிகவும் மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு

சட்டவிரோத குவாரிகளால் மாசு ஏற்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மருந்து உற்பத்தி முறைகேடுகளைத் தடுக்க 3 கட்ட நடவடிக்கை: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



