2025-ல் முதல் முறையாக.. வீராணம் ஏரி நிரம்பியது!

2025ல் முதல் முறையாக முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது வீராணம் ஏரி.
வீராணம் ஏரி (கோப்பு படம்)
வீராணம் ஏரி (கோப்பு படம்)
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

குடிநீர்த் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். அதாவது 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது.

ஏரியின் மூலம் 44,456 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 74 கன அடி அனுப்பப்படுகிறது.

மழைக் காலங்களில் மிகப்பெரிய வடிகாலாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீா் வெளியேற்றப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com