இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை வருகை!

தமிழகம் அழைத்துவரப்பட்ட மீனவர்கள் பற்றி...
விடுதலையான மீனவர்கள்.
விடுதலையான மீனவர்கள்.ANI
Published on
Updated on
1 min read

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 6 மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.

அவர்கள் 6 பேரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com