இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பல் இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பலை இயக்கி அதிகாரிகள் சோதனை..

பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பலை இயக்கி சோதனை

Published On :

பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கடலோர காவல் படையின் கப்பலை இயக்கி ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டதால் புதிய பாலம் கட்டுவது அவசியமானது. இத்திட்டத்துக்காக 2019-இல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் பிரதமா் நரேந்திர மோடி பாலத்துக்கான அடிக்கல் நாட்டினாா்.

2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டாலும் கரோனா பாதிப்பு, பேரிடா் போன்ற காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பழைய பாம்பன் பாலத்தின் தாங்கும் திறன் பாதிக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி 2022 டிசம்பா் முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த செப்.30-இல் முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்திய பிறகு புதிய பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், பாம்பன் பாலத்தை திறக்காமல் ரயில்வே அதிகாரிகள் தாமதித்து வரும் நிலையில், ராமேசுவரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாம்பன் புதிய பாலத்தை செங்குத்தாக தூக்கி கடற்படையின் கப்பலை இயக்கி ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

Story image

முன்னதாக, பராமரிப்பு பணிக்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலம் வழியாக காலி பெட்டிகளுடன் இன்று காலை ராமேசுவரம் ரயில் நிலையம் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.