பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்ட நிதி அதிகரிப்பு

தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீா்வளத் துறை வெளியிட்டுள்ளது.

Updated On :11 ஜூலை 2025, 12:55 am IST

தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீா்வளத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் உலக வங்கி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து, ரூ.2,962 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திட்டத்தை இடைக்காலமாக ஆய்வு செய்த உலக வங்கி, கூடுதல் நிதியை விடுவிக்கவும் திட்டத்தை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக ரூ.3,249.12 கோடி மதிப்பிலான பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டம் தமிழ்நாட்டில் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.