இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் மு.க. ஸ்டாலின் அலுவல் வேலைகளைக் கவனிப்பது பற்றி...

News image
மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி ஆலோசனை- DIPR
Updated On :23 ஜூலை 2025, 8:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் இன்று ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகள் குறித்து நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Story image

இதன் தொடர்ச்சியாக இன்று(புதன்கிழமை) காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களின் நிலை, மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

Story image

தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உள்ள பயனாளிகளுடனும் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். மேலும் கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

இதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். 

மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் 2, 3 நாள்களில் வீடு திரும்புவார் என முதல்வரைச் சந்திக்கச் சென்ற அவரது சகோதரர் மு.க. அழகிரி இன்று தெரிவித்தார்.

summary

Chief Minister M.K. Stalin held a video conference with the district collectors and people from the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.