டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிரொலி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு காரணமாக ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு காரணமாக ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று அறிக்கையின் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) நடைபெற உள்ளது.

ஆமீர் கான் - லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கடந்த ஏப். 1 முதல் 30 வரையில் இணையவழியாக தோ்வா்கள் விண்ணப்பித்தனா்.

காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com