விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் சதமடித்த வெய்யில்!

சென்னையில் வெய்யில் சதம்!

News image
Updated On :14 ஜூன் 2025, 4:40 pm

DIN

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை(ஜூன் 14) அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ்(100.76 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் சுட்டெரித்தது.

அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையம்(37.5 டிகிரி செல்சியஸ்), வேலூர்(37.4 டிகிரி செல்சியஸ்), தஞ்சாவூர்(37 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.