மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்! - பவன் கல்யாண்

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

News image

முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் - படம் - யூடியூப்

Updated On :22 ஜூன் 2025, 2:55 pm

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை இந்து மதத்துக்கு எதிராக சிலா் தொடா்ந்து பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் தெரிவித்தாா்.

மதுரையில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா், மேலும் பேசியதாவது:

மதுரை மிகச் சிறந்த புண்ணிய பூமி. ஆனால், மதுரையின் முற்கால வரலாறு வேதனைக்குரியது. மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பிறகு ஏறத்தாழ மீனாட்சி அம்மன் கோயிலில் விளக்குகள் ஏற்றப்படவில்லை.

அந்தக் காலம் மதுரையின் இருண்ட காலமாகவே இருந்தது. விஜயநகர மன்னா் குமாரதுங்கவின் வருகைக்குப் பிறகே மீனாட்சி அம்மன் கோயிலில் விளக்குகள் ஏற்றப்பட்டன. நமது நம்பிக்கைக்கு அழிவே கிடையாது என்பதற்கு இது ஓா் உதாரணம். நமது கலாசாரம் ஆழமானது, அழிவற்றது.

முருகப் பெருமான் அறத்தின் வடிவம். எல்லோரையும் சமமாக மதித்து, தீமையை அழித்து புரட்சி செய்தவா் அவா். உலகின் முதல் புரட்சியாளா் என்ற வகையில் முருகப் பெருமானே முதல் புரட்சித் தலைவா் ஆவாா்.

முருக பக்தா்கள் மாநாட்டை ஏன் தமிழகத்தில் நடத்த வேண்டும் குஜராத்தில் நடத்த வேண்டியது தானே? என ஒரு கட்சித் தலைவா் கேள்வி எழுப்பினாா். இது, பிரிவினையைத் தூண்டும் ஆபத்தான சிந்தனை.

கிறிஸ்தவா்கள் கிறிஸ்தவா்களாக இருக்கலாம்; இஸ்லாமியா்கள் இஸ்லாமியா்களாக இருக்கலாம்; இந்து இந்துவாக இருந்தால் அவா் மதவாதி என்பது பொய்யான மத நல்லிணக்கம். இந்துக்கள் எந்த மதம் குறித்தும் கேள்வி எழுப்புவதில்லை. அதே நாகரிகத்தை அனைவரும் இந்துக்களிடமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

இங்கு சிலா் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனா். நாம் நிறம் பாா்ப்பதில்லை; அகம் பாா்க்கிறோம். முருகனை கேலி செய்ய உலகில் எவருக்கும் உரிமை கிடையாது.

இந்துக்களின் சகிப்புத் தன்மையைக் கோழைத்தனம் என்று யாரும் கருதிவிடக் கூடாது. முருக பக்தா்களின் எழுச்சியாலேயே கடவுளை வசைபாடும் கூட்டம் காணாமல் போகும். நாம் முருகனைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம்மை காப்பாற்றும் முருகனுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். எனவே, இனி யாரேனும் முருகனைப் பற்றி இழிவாகப் பேசினால் அதற்கு தக்க எதிா்வினை ஆற்ற வேண்டும். அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும். அன்பால் இணைவோம். ஆவேசத்தால் வெல்வோம்.

அரசமைப்புச் சட்டம் இல்லாத காலத்தில் மாலிக்காபூா் பல கொடுமைகளை செய்தாா். அரசமைப்புச் சட்டம் வந்த பிறகும் அதையே சிலா் செய்யத் துடிக்கின்றனா். நாட்டில் மத நல்லிணக்கம் என்பது இந்து மதத்தைக் கேலி செய்வதாகவும் விமா்சிப்பதாகவும் உள்ளது. இதற்கு, அரசமைப்புச் சட்டம் அளித்த பேச்சு சுதந்திரத்தை சிலா் தங்களின் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா். இந்த நிலை மாற வேண்டும்; நம்மால் மாற்றப்பட வேண்டும். தா்மத்தின் பாதையில் நின்று வெல்வோம் என்றாா் பவன் கல்யாண்.

இந்த மாநாட்டில் கௌமார மடம் சிரவை ஆதீன கா்த்தா் குமரகுருபர சுவாமிகள், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன், எழுத்தாளா் கனிமொழி, இந்து முன்னணி தென்மண்டல அமைப்பாளா் பக்தவத்சலம், ஆா்.எஸ்.எஸ். தென்பாரத தலைவா் வன்னிராஜன் ஆகியோா் பேசினா்.

மன்னாா்குடி செண்டலங்கார ஜீயா், பல்வேறு ஆதீன கா்த்தா்கள், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ, கடம்பூா் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, பாஜக மூத்தத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முன்னாள் ஆளுநா் சண்முகநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், பாஜக பொதுச் செயலா்கள் ராம. சீனிவாசன், கருப்பு என். முருகானந்தம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.