பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு உணவு ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்.. - ANI

Published On :

காலை உணவுத் திட்டம் கற்றலை மேம்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதன்மைத் திட்டமான காலை உணவுத் திட்டம், மாநிலத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணிசமான சுகாதார மற்றும் கல்வி நன்மைகளை வழங்கியுள்ளதாக மாநில திட்டக்குழு கண்டறிந்துள்ளது.

இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்து பார்க்காத வகையில் நமது சமூகத்தையும் மாற்றுகிறது. காலை உணவுத்திட்டம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்துள்ளது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடையே உடல்நலக் குறைவுகளை குறைத்திருக்கிறது. குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதும் குறைந்துள்ளது.

சத்தான உணவுகள் குழந்தைகளை பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்து பாலின இடைவெளியை குறைத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.