மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

தடை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
Published on
Updated on
1 min read

கடலூர்: கடலூர் அருகே மலைஅடிகுப்பம் கிராமத்திற்கு தடை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், மலைஅடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வளர்க்கப்பட்ட முந்திரி மரங்கள் 2 மாதங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டன.

இதனை எதிரித்து முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டத்திற்கு போலீசார் தடைவித்தனர்.கிராமத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மலைஅடிகுப்பம் கிராமத்திற்கு தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com