வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்

News image
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated On :24 மார்ச் 2025, 10:29 pm

Din

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை வி.வி.ராஜன் செல்லப்பா எழுப்பினாா். அப்போது பேசுகையில், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாம் திருப்பரங்குன்றத்துக்கு ரோப்காா் வசதி அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: திருப்பரங்குன்றத்துக்கும் திருநீா்மலைக்கும் ரோப்காா் அமைக்க கடந்த ஆண்டு ரூ.26 கோடி அறிவிக்கப்பட்டது. இப்போது, மூன்று வகையான அளவைப் பணிகள் முடிவுற்று ரோப்காா் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என தனியாா் நிறுவனம் சாா்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. போதுமான நிதிஒதுக்கப்பட்டு நிகழாண்டு இறுதிக்குள்ளாக பணிகள் தொடங்கப்படும்.

திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் ரூ.2.5 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூலை 14-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றாா் அமைச்சா்.