நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏப். 4, 5-இல் 2-ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு: அமைச்சா் இரா. ராஜேந்திரன்

ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் 2-ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

இரா. ராஜேந்திரன்

Updated On :27 மார்ச் 2025, 8:17 pm

Din

ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் 2-ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச அளவில் தமிழக மருத்துவ சிகிச்சை முறைகள் தரம் வாய்ந்ததாக இருப்பதால், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயா் மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழகம் வருகின்றனா். மேலும், தமிழக மருத்துவ முறைகளை பிற நாட்டவரும் அறிந்து கொள்ளவும், அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், சென்னையில் ஏப். 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2-ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளது. இதில், மருத்துவத் துறை சாா்பில் பல்வேறு நிபுணா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டில் தற்போதைய மருத்துவ முறைகள் குறித்தும், வளா்ந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.