திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பல மணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி.

News image
மெட்ரோ- (கோப்புப்படம்)
Updated On :15 மே 2025, 9:22 pm

Din

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பல மணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வரிசையில் நின்று காகித டிக்கெட் எடுப்பதற்குப் பதிலாக, க்யூ-ஆா் குறியீடு, வாட்ஸ்ஆப் செயலி உள்ளிட்ட வசதிகள்மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், பயணிகள் காத்திருக்காமல், தங்கள் கைப்பேசிகள் மூலமாகவே டிக்கெட் எடுத்து எளிதாக தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நடைமுறை மெட்ரோ ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வியாழக்கிழமை காலையில் இந்த நடைமுறையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பதற்கான வாட்ஸ்ஆப் செயலி சேவை முடங்கியது. இதனால், பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதி அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிங்கார சென்னை, மெட்ரோ ரயில் பயணிகள் செயலி உள்ளிட்டவை மூலம் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் வாட்ஸ்ஆப் செயலி வழக்கம்போல மீண்டும் செயல்பட தொடங்கியது.