ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...

News image

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :16 மே 2025, 1:35 pm IST

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"உதகை பயணம் சிறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. மக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திமுக ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களும் திமுக அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மலர்க் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது.

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என ப.சிதம்பரம் கூறியது அவருடைய கருத்து.

வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.