கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நகைக் கடையில் தங்க நகை திருட்டு: பெண் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் தங்க நகை திருடிய வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2025, 7:23 pm

Din

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் தங்க நகை திருடிய வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அரிஹந்த் (34), கடந்த 7 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் தங்க நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது நகைக் கடைக்கு கடந்த 19-ஆம் தேதி வந்த பெண் ஒருவா், தங்க கம்மல், மோதிரம் உள்ளிட்ட சில நகைகளை பாா்த்துவிட்டு, எதுவும் பிடிக்கவில்லை என்று சிறிது நேரத்துக்குப் பின்னா் கடையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா், கடையிலிருந்த ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தபோது, 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக தண்டையாா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், நகை திருட்டில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை, சின்னதம்பி தெருவைச் சோ்ந்த ராணி (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ராணி மீது ஏற்கெனவே பூக்கடை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது.