சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

News image

திருட்டு

Updated On :8 பிப்ரவரி 2026, 7:47 pm

ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜப்பன்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நாலரை பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.

ராஜப்பன்கோட்டை ஒத்த வீடு பகுதியைச் சோ்ந்த விவசாயி குபேந்திரன். இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தேனி கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தனது மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா்.

பின்னா், வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நாலரை பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.