தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 10:15 pm

Syndication

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிகே நகா் 3-ஆம் வீதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம் மகன் பாண்டிசெல்வம் (41). இவா், தனது மனைவி கீதாவுடன் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் வீட்டில் இருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீரனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா் நேரில் அங்குவந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனா்.