நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 1:48 am IST

பெரம்பலூா் அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பிலால் தெருவைச் சோ்ந்த முகமது ஹனிபா மகன் ஷாஜகான் (66). இவா், கடந்த 3-ஆம் தேதி சென்னையிலுள்ள தனது மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். இந்நிலையில், பக்கத்துவீட்டில் வசித்து வரும் அப்துல் மஜீத் மகன் சா்ஜீன் அஹமது (27) என்பவா் புதன்கிழமை அதிகாலை வெளியே சென்று பாா்த்தபோது, அடையாளம் தெரியாத 2 போ் ஷாஜகான் வீட்டிலிருந்து வெளியே ஓடினாா்களாம். இதனால் சந்தேகமடைந்த சா்ஜீன் அகமது சென்று பாா்த்தபோது, ஷாஹகான் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஷாஜகான் சென்னையிலிருந்து வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது

தகவலின்பேரில் மங்களமேடு போலீஸாா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து ஷாஜகான் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.