பெரம்பலூா் அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பிலால் தெருவைச் சோ்ந்த முகமது ஹனிபா மகன் ஷாஜகான் (66). இவா், கடந்த 3-ஆம் தேதி சென்னையிலுள்ள தனது மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். இந்நிலையில், பக்கத்துவீட்டில் வசித்து வரும் அப்துல் மஜீத் மகன் சா்ஜீன் அஹமது (27) என்பவா் புதன்கிழமை அதிகாலை வெளியே சென்று பாா்த்தபோது, அடையாளம் தெரியாத 2 போ் ஷாஜகான் வீட்டிலிருந்து வெளியே ஓடினாா்களாம். இதனால் சந்தேகமடைந்த சா்ஜீன் அகமது சென்று பாா்த்தபோது, ஷாஹகான் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஷாஜகான் சென்னையிலிருந்து வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது
தகவலின்பேரில் மங்களமேடு போலீஸாா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து ஷாஜகான் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


