மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 8:18 pm

பெரம்பலூா் அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பிலால் தெருவைச் சோ்ந்த முகமது ஹனிபா மகன் ஷாஜகான் (66). இவா், கடந்த 3-ஆம் தேதி சென்னையிலுள்ள தனது மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். இந்நிலையில், பக்கத்துவீட்டில் வசித்து வரும் அப்துல் மஜீத் மகன் சா்ஜீன் அஹமது (27) என்பவா் புதன்கிழமை அதிகாலை வெளியே சென்று பாா்த்தபோது, அடையாளம் தெரியாத 2 போ் ஷாஜகான் வீட்டிலிருந்து வெளியே ஓடினாா்களாம். இதனால் சந்தேகமடைந்த சா்ஜீன் அகமது சென்று பாா்த்தபோது, ஷாஹகான் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஷாஜகான் சென்னையிலிருந்து வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது

தகவலின்பேரில் மங்களமேடு போலீஸாா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து ஷாஜகான் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.