ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:00 am IST

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி தையல் நாயகி (41). கிருஷ்ணமூா்த்தி வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறாா். தையல்நாயகி குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் உள்ளே உள்ள வராண்டாவில் தூங்கினராம்.

சனிக்கிழமை காலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே அறைக்கு சென்று பாா்த்தபோது இரும்பு பீரோ திறந்து கிடந்ததும், அதிலிருந்த துணிகள் மற்றும் பொருள்கள் கீழே சிதறியும் கிடந்துள்ளது. மேலும், பீரோவில் இருந்த இருபத்து மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.

இதே போல, அதே கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி பூச்சி (50). தம்பதியினா் வெள்ளிக்கிழமை மாலை விளைநிலத்துக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கினராம். சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த எட்டே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சம்பவம் நடைபெற்ற வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினாா்.

இது குறித்த புகாா்களின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.