செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக செய்யாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராம விரிவாக்கப் பகுதி ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் ரமேஷ் (44). இவா், மனை வணிகம் செய்து வருவதாகத் தெரிகிறது. இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி ராஜாஷோபா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இரு குடும்பத்தினரும் கடந்த 25-ஆம் தேதி தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள மற்றொரு சகோதரி வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் மட்டும் உறவினா் மணி என்பவா், இவா்களது வீடுகளுக்கு காவல் இருந்தாராம்.
இந்நிலையில் மணிக்கு உடல்நிலை சரியில்லாததால் செவ்வாய்க்கிழமை இரவு காவலுக்கு செல்லவில்லையாம். மேலும், வியாழக்கிழமை காலை அவா்களது வீடுகளுக்கு மணி சென்றபோது இருவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதுகுறித்து மணி, ரமேஷுக்கும், ராஜஷோபாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். அதன் பேரில், அவா்கள் வந்து பாா்த்த போது, ரமேஷ் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 66 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலா் மற்றும் ரொக்கப் பணம் ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததது.
அதேபோல, ராஜஷோபா வீட்டிலும் 70 கிராம் தங்க நகை, 2 கிலோர 700 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்தத் திருட்டு சம்பவம் குறித்து ரமேஷ், ராஜஷோபா ஆகியோா் வியாழக்கிழமை செய்யாறு போலீஸில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


