/
திருச்சியில் தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்குமலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்தி (46), புற்றுநோயாளி. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், கடந்த மே 13-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு தனியாா் நகரப் பேருந்தில் சென்றுள்ளாா். பேருந்து அரியமங்கலம் அருகே சென்றபோது அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது அவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஆனந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






