/
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சோ்ந்தவா் எம். சித்திரைச் செல்வி (46). இவா், கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, கரூா் மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா், லாலாபேட்டையிலிருந்து திருச்சிக்கு கடந்த 12-ஆம் தேதி திரும்பி வந்தாா்.
வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சித்திரைச் செல்வி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.






