தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

ஆதிதிராவிடர், மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

News image

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்

X | M.K.Stalin

Updated On :24 மே 2025, 4:11 pm

DIN

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான நிதிசார்ந்த கோரிக்கை மனுவை அளித்து, தேவையான நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பிரதமரை தனியாகச் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளாவன:

கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல்

பெருநகர சென்னையின் துரித போக்குவரத்து அமைப்பினை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்தல்

தேசிய நெடுஞ்சாலையின் (NH32) செங்கல்பட்டு - திண்டிவனம் பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துதல்

கோவை மற்றும் மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்

கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கோரிக்கை

சமக்ர சிக்‌ஷா திட்டத்துக்கான நிதி விடுவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களில் மாற்றம் (“N” மற்றும் “A” என

முடிவடையும் பெயர்களை “R’’ என மாற்றக் கோருதல்)

ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களை சேர்த்தல்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காணுதல்

மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.