/

குட்கா, புகையிலை பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை!

குட்கா, புகையிலை பொருள்களுக்கு தடை தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :26 மே 2025, 5:39 pm IST

தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குட்கா, புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மே 23-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மேலும் மேலும் ஓராண்டுக்கு(2026 மே 23 ஆம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.