சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரிலிருந்து கொல்லத்திற்கு நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை 2 மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலானது வாரந்தோறும் வெள்ளி இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில் சனிக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் எழும்பூரை வந்தடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் கொல்லத்திற்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை 2 மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது வாரந்தோறும் ஞாயிறு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 4.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. பின்னர் மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து திங்கள் 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
இதற்கான முன்பதிவு நவ.4ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நவம்பர் 16 ஆம் தேதி திறந்து, டிசம்பர் 27 ஆம் தேதி அடைக்கப்படுகிறது.
Summary
Southern Railway has not announced specific special trains for the 2025-2026 Sabarimala Mandala Puja season from Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்-வேளாங்கண்ணிக்கு ஜூலை 14, 17-இல் சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...

தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!







