6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News image
முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
Updated On :4 நவம்பர் 2025, 8:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு, திமுகவில் மீண்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதனும் புதிய துணை பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். திமுக சட்டதிட்ட விதி 17-பிரிவு 3-ன்படி முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.

7 பேராக அதிகரிப்பு: திமுக துணைப் பொதுச் செயலா்களாக அமைச்சா் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி, எம்.பி.-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் உள்ளனா். இப்போது கூடுதலாக இரண்டு போ் நியமிக்கப்பட்டதன் மூலம், துணைப் பொதுச் செயலா்களின் எண்ணிக்கை ஏழாக உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டப் பொறுப்பாளா்கள்: திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, மாவட்டப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, கே.ஈஸ்வரசாமி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்ட பொறுப்பாளரானாா் கதிா் ஆனந்த்: வேலூா் மாவட்டத்தில் கட்சியின் நிா்வாக வசதிக்காகவும், பணிகள் செம்மையாக நடைபெறவும், அந்த மாவட்டமானது வேலூா் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் வடக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்புகளையும் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கதிா்ஆனந்த், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

MK Stalin has issued an announcement appointing DMK deputy general secretaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.