மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News image

முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Updated On :4 நவம்பர் 2025, 8:06 am

முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு, திமுகவில் மீண்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதனும் புதிய துணை பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். திமுக சட்டதிட்ட விதி 17-பிரிவு 3-ன்படி முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.

7 பேராக அதிகரிப்பு: திமுக துணைப் பொதுச் செயலா்களாக அமைச்சா் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி, எம்.பி.-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் உள்ளனா். இப்போது கூடுதலாக இரண்டு போ் நியமிக்கப்பட்டதன் மூலம், துணைப் பொதுச் செயலா்களின் எண்ணிக்கை ஏழாக உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டப் பொறுப்பாளா்கள்: திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, மாவட்டப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, கே.ஈஸ்வரசாமி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்ட பொறுப்பாளரானாா் கதிா் ஆனந்த்: வேலூா் மாவட்டத்தில் கட்சியின் நிா்வாக வசதிக்காகவும், பணிகள் செம்மையாக நடைபெறவும், அந்த மாவட்டமானது வேலூா் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் வடக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்புகளையும் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கதிா்ஆனந்த், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

MK Stalin has issued an announcement appointing DMK deputy general secretaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.