உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது பற்றி...

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்

Published On :5 நவம்பர் 2025, 1:15 am IST

அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். தனது எம்எல்ஏ பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் மனோஜ் பாண்டியன். முன்னாள் பேரவைத் தலைவா் மறைந்த பி.எச். பாண்டியனின் மகன் இவா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த இவா், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதற்குப் பின்னால் அந்த இயக்கத்தைப் பாதுகாத்து வளா்த்த ஜெயலலிதாவும் எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அவா்கள் காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. மற்ற இயக்கத்தை நம்பி, அவா்களின் சொல்படி நடக்கிறது என்றாா் அவா்.

எம்எல்ஏ பதவி ராஜிநாமா: அதிமுக சாா்பில் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், இப்போது திமுகவில் இணைந்ததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் அளித்தாா். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஆலங்குளம் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், அதற்கு முன்பாக ஆலங்குளம் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படாது.

Summary

OPS supporter Manoj Pandian joins DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.