‘நாயகன்’ மறு வெளியீட்டுக்குத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

‘நாயகன்’ மறு வெளியீட்டுக்குத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

‘நாயகன்’ திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
Published on

நடிகா் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

‘நாயகன்’ படத்தின் வெளியீட்டு உரிமை தங்களிடமே இருப்பதாகக் கூறி, எஸ்.ஆா். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளா் எஸ்.ஆா். ராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாகக்கல் செய்தாா். அதில், ‘நாயகன்’ திரைப்படத்தை வெளியிடும் உரிமையை 2023-ஆம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தாம் பெற்ாகக் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், இந்த உரிமையை மறைத்து வி.எஸ்.பிலிம் இன்டா்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமாா், ‘ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மறு வெளியீடு செய்யப்படுவதால், ‘நாயகன்’ திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டாா். அதேவேளையில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும்படி, ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் வி.எஸ். பிலிம்ஸ் இன்டா்நேஷனல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

16 முறை பாா்த்துள்ளேன்... விசாரணையின்போது, நீதிபதி என்.செந்தில்குமாா், ‘நாயகன் படத்தை நான் 16 முறை பாா்த்துள்ளேன் என்றும், காட்சி வாரியாக தன்னால் இப்போது சொல்ல முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com