வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் இரு காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவது பற்றி..
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16ல் தொடங்கியது. இதன்பிறகு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திரத்தில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது.

இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 14-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 19-ம் தேதி அந்தமான கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், வரும் நாள்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The India Meteorological Department has stated that two successive low-pressure areas are likely to form in the Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com