செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கூகுள் மேப் பயன்படுத்துபவரா... மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ வரை.. 10 புதிய அம்சங்கள்..!

கூகுள் மேப் பயன்படுத்துபவர்களுக்கான மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ வரை... 10 புதிய அம்சங்களுடன் முழு விவரம் இதோ..!

News image

கூகுள் மேப்.

Updated On :7 நவம்பர் 2025, 2:17 pm IST

மெட்ரோ டிக்கெட் பதிவு செய்தல் முதல் ஜெமினி ஏஐ வரையிலான கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் தொடர்பான அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் தனது கூகுள் மேப் செயலி மேம்படுத்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அடுத்த நாளே இந்தியாவில் உள்ள கூகுள் மேப் பயனாளர்களுக்கான 10 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் முதல்முறையாக கூகுள் மேப்ஸின் புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், செய்யறிவு இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் பதிவு உள்ளிட்டவைகளும் உள்ளன.

தனித்துவமான சிறப்பம்சமாக கைகளால் தொடாமலேயே இயக்கக்கூடிய வகையில் ஜெமினி செய்யறிவு உதவியுடன் வழிகளைப் பெறுதல், செய்யறிவு குரல் ஒரு கோ-பைலட் போலவும் செயல்படுகிறது.

தொடுதல் இன்றி...

ஜெமினி செய்யறிவுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், மொபைல் போனை தொடாமலேயே எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தேடலாம்.

உதாரணமாக, “விலை அதிகமில்லாத அருகில் உள்ள ஒரு நல்ல உணவகத்தைக் கண்டுபிடித்துக் கொடு, அதனுடன் பார்க்கிங் வசதியும் வேண்டும்...” எனக் கூறினால் ஜெமினி செய்யறிவுடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் மேப்ஸில் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதோடு நின்றுவிடவில்லை. மின்சார வாகன பயனாளர்கள் சார்ஜிங் இடங்களைப் பற்றியும் கேட்டுக்கொள்ளலாம்.

பரிந்துரைகள் - இடம் தொடர்பான தேடல்...

கடந்தாண்டு தொடங்கப்பட்ட ‘இஸ்பிரேஷன்’ என்ற அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்களின் பயணத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்கள், உணவங்கள் குறிந்த பரிந்துரைகளையும் வழங்குகிறது.

பயனர் மதிப்பீடுகள் (using reviews), புகைப்படங்கள், பொதுத் தகவல்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கும் கூகுள் மேப்ஸால் பதிலளிக்க முடியும்.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

கூகுள் மேப்ஸில் போக்குவரத்து நுண்ணறிவு தொடர்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு, தில்லி, மும்பை போன்ற பெரு நகர்களில் போக்குவரத்து நெரிசல், இடையூறுகள் உள்ளிட்டவற்றையும் முன்பே கணித்துக் கூறும் அம்சங்களும் உள்ளன.

அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்கள் மற்றும் நொய்டா, குருகிராம், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகர்களின் நெடுஞ்சாலைகளில் உள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகளின் இடங்களையும் கூகுள் மேப்ஸால் கூறமுடியும்.

பயண வசதி மேம்பாடுகள்

தில்லி, பெங்களூரு, கொச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள மெட்ரோவில் செல்லக்கூடிய பயணிகள் இப்போது கூகுல் மேப்ஸ் மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த செயல்முறை விரைவில் மும்பையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிக்கலான மேம்பாலங்களில் செல்வது தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனையும் தொடுதல் இன்றி குரல் மூலம் பயன்படுத்தமுடியும்.

Summary

Google Maps Brings 10 New Features In India: Conversational Navigation, Traffic Alerts And More, Check Full List Here

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.