கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்! - கனிமொழி

கோவை பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி பதில்...

kanimozhi

கனிமொழி - கோப்புப்படம்

Published On :

பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை இந்த சமூகம் நிறுத்த வேண்டும் என்று கோவை பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்தார்.

மேலும், வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் எஸ்.ஐ.ஆர். பற்றி பேசினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி,

"ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில் இந்த விஷயங்களை, அதாவது பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு விரைவிலேயே ஒரு அழுத்தமான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என முழு முயற்சியோடு ஈடுபட வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கலாம், நடவடிக்கை எடுத்ததற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்?

நெல்லையில் தோல்வியுற்றால் பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் சொல்லவில்லை. நானும் அவருடன் இருந்தேன். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் சொவ்லது இயல்புதான்.

எஸ்ஐஆர், தேர்தலுக்கு முன்னால் அவசர அவசரமாக கொண்டு வர வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாக நேர்மையாக நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் போதிய அவகாசம் கொடுத்து சரியாக செய்திருக்க முடியும். பிகாரில் எத்தனை பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம். ராகுல் காந்தியும் இதனை எடுத்துரைத்திருந்தார்.

ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சிதான் இது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Summary

We need to stop blaming the victim: kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.