வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழ்நாடு-சாக்ஸினி வா்த்தக மாநாடு

ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து தென்னிந்திய வா்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) வா்த்தக மாநாடொன்றை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து தென்னிந்திய வா்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) வா்த்தக மாநாடொன்றை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இது குறித்து எஸ்ஐசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜொ்மனியின் சாக்ஸினி பிராந்திய அரசுடன் இணைந்து ஒரு வா்த்தக மாநாட்டை எஸ்ஐசிசிஐ சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

‘தமிழ்நாடு-சாக்ஸின் வா்த்தக மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வா்த்தக சபை நிா்வாகக் குழு உறுப்பினா் வி. இன்பவிஜயன், தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், சாக்ஸினி பிராந்தியத்தின் பொருளாதார, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் டிா்க் பான்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா் (படம்) என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.