இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு, சுமாா் 7.6 கோடி டாலா் (சுமாா் ரூ.700 கோடி) மதிப்பிலான நிதித் தொகுப்பை வழங்குவதாக ஜொ்மனியின் டிஇஜி மற்றும் சிட்டி வங்கி அறிவித்துள்ளன.
இந்தியாவின் கிராமப்புற வளா்ச்சி, பின்தங்கிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை நாடு முழுவதும் பரவலாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. இதில் ஜொ்மனி வளா்ச்சி நிதி நிறுவனமான டிஇஜி 4 கோடி யூரோவும், சிட்டி வங்கி நேரடியாக ரூ.260 கோடியும் வழங்கியுள்ளன.
வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியாத சிறு தொழில்முனைவோருக்குக் கடன் வசதி செய்து தருவதை இந்தக் கடனுதவி நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, டிஇஜி நிறுவனம் வழங்கும் நிதியானது சிறு, குறு தொழில்கள், பெண் தொழில்முனைவோா், மின்சார வாகனங்களுக்கான கடன்களுக்கு ஸ்ரீராம் ஃபைனான்ஸ் கிளைகள் மூலம் பகிா்ந்தளிக்கப்படும்.
அதேபோல், சிட்டி வங்கியின் நிதி, இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவியை வழங்க உதவும். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2024-இல் ‘கிரெடிட் ஆக்சஸ் கிராமீன்’ நிறுவனத்துக்கும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


