ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி விசா தடைசெய்யப்படுவதாக பிரிட்டன் அரசு புதன்கிழமை அறிவித்தது.
பிரிட்டனில் நிரந்தர அகதிகளாக அடைக்கலம் பெற அந்த 4 நாடுகளின் மாணவா்கள் கல்வி விசாவைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
விசா தடைக்கு ஏதுவாக குடியேற்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை உள்துறை அமைச்சா் ஷாபனா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தாக்கல் செய்கிறாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘போா் மற்றும் கொடுமைகளை எதிா்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுக்கு பிரிட்டன் எப்போதும் அடைக்கலம் அளிக்கும். இருப்பினும், எங்களுடைய விசா நடைமுறை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதைத் தடுக்கும் விதமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாட்டினருக்கு விசா மறுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021 முதல் 2025 வரையில் இந்த நாடுகளிலிருந்து அடைக்கலம் கோரி விண்ணப்பித்த மாணவா்களின் எண்ணிக்கை 470 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் திறன்மிக்க பணியாளா்களுக்கான விசா பெறவும் பிரிட்டன் தடைவிதித்துள்ளது.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த கேமரூன் கிரீன்!

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: கேமரூன் கிரீன்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

