இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்குத் தடை

News image
பிரிட்டன் பிரதமர்- கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி விசா தடைசெய்யப்படுவதாக பிரிட்டன் அரசு புதன்கிழமை அறிவித்தது.

பிரிட்டனில் நிரந்தர அகதிகளாக அடைக்கலம் பெற அந்த 4 நாடுகளின் மாணவா்கள் கல்வி விசாவைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

விசா தடைக்கு ஏதுவாக குடியேற்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை உள்துறை அமைச்சா் ஷாபனா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தாக்கல் செய்கிறாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘போா் மற்றும் கொடுமைகளை எதிா்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுக்கு பிரிட்டன் எப்போதும் அடைக்கலம் அளிக்கும். இருப்பினும், எங்களுடைய விசா நடைமுறை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதைத் தடுக்கும் விதமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாட்டினருக்கு விசா மறுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021 முதல் 2025 வரையில் இந்த நாடுகளிலிருந்து அடைக்கலம் கோரி விண்ணப்பித்த மாணவா்களின் எண்ணிக்கை 470 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் திறன்மிக்க பணியாளா்களுக்கான விசா பெறவும் பிரிட்டன் தடைவிதித்துள்ளது.