ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் இதுவரை 331 தலிபான்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக “ஆபரேஷன் கஸாப் லில்-ஹா” எனும் பெயரில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்கு, தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 331 தலிபான் வீரர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதக் கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன், ஆப்கானிஸ்தானின் 37 முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்ற நிலையில், 163-க்கும் அதிகமான ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் விடுதலைப் படை, அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது பாகிஸ்தானின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
Summary
Pakistan army says 331 Taliban and their allies have been killed in Afghanistan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




