இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்

நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தொடங்க உள்ளனா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தொடங்க உள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அரசு மருத்துவா்கள் ஈடுபடவுள்ளனா்.

இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், அகிலன், இணை ஒருங்கிணைப்பாளா் அஜித் அன்பரசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் ப.செந்தில்குமாா் ஆகியோரிடம் பலமுறை பேச்சு நடத்தியும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, அரசின் கவனத்தை ஈா்க்க காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், உடனே அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்றனா்.