கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கிரிக்கெட் பேட், ஆட்டோ, விசில்... பொது சின்னம் கோரி தவெக மனு!

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்திருப்பது பற்றி...

தவெக தலைவர் விஜய் - Photo: X/CTR NirmalKumar

Published On :

பொது சின்னம் கோரி தோ்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்துள்ளது.

தமிழத்தில் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் கோரி முன்னதாகவே தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், தோ்தலில் தமிழகத்தில் முதல்முறையாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

அந்தக் கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தலைமையில் நிா்வாகிகள், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அதில், விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு தொடா்பான இறுதி முடிவை டிசம்பா் மாதத்துக்குள் தோ்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Petition filed with the Election Commission seeking a common symbol!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.