புதுக்கோட்டை நார்த்தாமலை சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று பழுது காரணமாக திடீரென தரையிறங்கியது.
புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் இந்த விமானத்தைத் தள்ளி சாலையோரத்தில் நிறுத்தியுள்ளனர்.
சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு வந்த அந்த பயிற்சி விமானத்தில் விமானி உள்பட இருவர் பயணித்துள்ளனர்.
சிறிய ரக பயிற்சி விமானம் என்பதால் பழுது ஏற்பட்டவுடன் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
விமானத்தின் ஒரு பகுதி இறக்கை உடைந்ததால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் மக்கள் அதிகமாக கூடியுள்ளனர். அவர்களை போலீசார் விலக்கி வருகின்றனர்.
Summary
Training plane lands on road near Pudukkottai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரு நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து- 13 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: ஒருவர் பலி

பஹாமாஸில் விமான விபத்து

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



