டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

புதுக்கோட்டை அருகே திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம் பற்றி...

Training plane lands on road near Pudukkottai

சாலையில் தரையிறங்கிய விமானம்.. - DIN

Published On :

புதுக்கோட்டை நார்த்தாமலை சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று பழுது காரணமாக திடீரென தரையிறங்கியது.

புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் இந்த விமானத்தைத் தள்ளி சாலையோரத்தில் நிறுத்தியுள்ளனர்.

சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு வந்த அந்த பயிற்சி விமானத்தில் விமானி உள்பட இருவர் பயணித்துள்ளனர்.

சிறிய ரக பயிற்சி விமானம் என்பதால் பழுது ஏற்பட்டவுடன் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

விமானத்தின் ஒரு பகுதி இறக்கை உடைந்ததால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் மக்கள் அதிகமாக கூடியுள்ளனர். அவர்களை போலீசார் விலக்கி வருகின்றனர்.

Summary

Training plane lands on road near Pudukkottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.