தமிழ்நாட்டில் 5.90 கோடி எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல்...
92 percent SIR forms distributed in Tamil Nadu: Election Commission
எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்ENS
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இதுவரை 5.90 கோடி பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை 92.04%(5.90 கோடி) வாக்காளர்களுக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இதுவரை 92.04% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்காளர்களில் 5.90 பேர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி(6,41,14,582) வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவு, கோவாவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்தமான் நிக்கோபாரில் 99.63% பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும்

சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணிகள் 90%க்கு மேல் முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் 87.54%, புதுச்சேரியில் 93.88% படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 48 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Election Commission says that 92 percent SIR forms distributed in Tamil Nadu as per today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com