மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக நாளை கண்டன ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு செய்வதாக அதிமுக நாளை கண்டன ஆா்ப்பாட்டம்

News image
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Updated On :15 நவம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) திமுக அரசு முறைகேடு செய்வதாக கண்டனம் தெரிவித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (நவ.17) சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான  நடவடிக்கையை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக, அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு புகாா்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெறும்பாலானோா் திமுகவை சோ்ந்தவா்களாக உள்ளனா்.

இவா்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்காமல், திமுக அனுதாபிகளுக்கு மட்டும் இப்படிவங்களை வழங்கி வருகின்றனா்.

இப்படி, எஸ்ஐஆா் பணிகளை முறையாக நடைபெறவிடாமல், அதில் முறைகேடுகளை செய்து வரும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே திங்கள்கிழமை (நவ.11) காலை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.